19.
நான் பேசுபவை முக்கியத்துவம் வாய்ந்தவை
பகிர்
- நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
- இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
- கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
- உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
- ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
-
நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை
நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
-
நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா?
நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
- வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
-
குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர்
சொல்லச் சொல்லுங்கள்.
- ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?
மத்தேயு 12:33-37
33,“நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை
வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின்
தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும்.
34 பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக்
கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது.
35 ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன்
நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன்
உள்ளத்தில் பொல்லாதவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன்
பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான்.
36 மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு
ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில்
நடக்கும்.37உங்களது வார்த்தைகளே
உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை
நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம்
தீர்க்கும்” என்று சொன்னார்.
அதிகமாக வாசியுங்கள்
கண்டுபிடியுங்கள்
- இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
-
இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது
சங்கடப்படுத்துகிறது?
- கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
-
இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று
தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
- மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
- சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
- பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
- கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
- அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்