மத்தேயு 6:9-15
9நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்:
, “‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே,
உமது
பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10உமது இராஜ்யம் வரவும்
பரலோகத்தில் உள்ளது போலவே
பூமியிலும் நீர்
விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11ஒவ்வொரு நாளும் எங்களுக்குத்
தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12மற்றவர் செய்த தீமைகளை நாங்கள்
மன்னித்தது போலவே
எங்கள் குற்றங்களையும்
மன்னியும்.
13எங்களைச் சோதனைக்கு உட்படப்
பண்ணாமல்
பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’
14நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார்.15ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.
இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் எல்லா காலத்திலும் உள்ள அனைத்து மக்களுடைய பாவங்களுக்காகவும் கிரயம் செலுத்தியபோதிலும், பாவங்கள் தானாகவே மன்னிக்கப்படும் என்று அர்த்தமாகாது. இப்போது நாம் பெறும் மன்னிப்புக்கான சாத்தியத்தை இயேசு ஏற்படுத்தினார்.
நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்றால், நாம் இரண்டு காரியங்களை செய்ய வேண்டும்:
கடவுள் நம்மை மன்னிக்கும்போது, இயேசு நம் பாவங்களை நமக்கெதிராக எண்ணுவதில்லை, ஏனென்றால் இயேசு நமக்காக பாடுபட்டு மரித்தார். நம்முடைய பாவங்களின் விளைவுகளை அவர் ஏற்றுக்கொண்டார், அதனால் நாம் விடுதலை பெற்றோம். இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளியாக இருந்தாலும், நம்மை மன்னிப்பதாலேயே கடவுள் நம்மை குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டவில்லை நாம் உண்மையில் குற்றவாளியாக இருந்தாலும், கடவுளால் நீதிமான்கள் என்று அறிவிக்கப்படுகிறோம். அது கடவுளோடு சமரசம் செய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. என்ன பாக்கியம்!
நமக்கு எதிராக பாவம் செய்தவர்களை மன்னிக்கும்போது, அதை நாம் மறந்துவிட்டோம், மறுக்கிறோம் அல்லது என்ன நடந்ததோ அதை நாம் மறிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. இந்த சூழலில் "மன்னிப்பு" என்பது போகட்டும் என்று விட்டுவிடுவதாகும். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்படி கடவுளிடம் ஒப்படைக்கிறோம். நாம் ஒருவரை மன்னிக்கும்போது, கடவுளுக்கு முழுமையான காரியத்தை ஒப்படைப்போம், அந்த மனிதனுடனான நமது உறவு அந்த பாவத்தின் சுமையில் இருந்து விடுவிக்கப்பட்டது. நாம் இனிமேலும் ஒரு பகையை கொண்டு இருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக நம் இடையே எந்த குற்றமும் இல்லாததால், நாம் பாரமில்லாமல் அந்த நபருடன் தொடர்பு கொண்டு வாழ முடியும்.
![]() |
![]() |
![]() |