20.
ஒப்பிட்டு பார்ப்பதில் இருந்து எப்படி விடுபட வேண்டும்
பகிர்
- நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
- இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
- கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
- உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
- ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
-
நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை
நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
-
நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா?
நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
- வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
-
குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர்
சொல்லச் சொல்லுங்கள்.
- ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?
மத்தேயு 7:24-27
24,“என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற
எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின்
மேல் கட்டினான்.25கனமழை பெய்து
வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல்
கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.
26,“என் போதனைகளைக் கேட்டுவிட்டு
அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன்
மணல் மீது தன் வீட்டைக் கட்டினான்.
27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது.
பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”
அதிகமாக வாசியுங்கள்
கண்டுபிடியுங்கள்
- இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
-
இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது
சங்கடப்படுத்துகிறது?
- கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
-
இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று
தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
- மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
- சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
- பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
- கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
- அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்